பதிவு செய்த நாள்
22 டிச2021
21:22
புதுடில்லி:வருமான வரித் துறையின் புதிய ‘இ--பைலிங்’ தளத்தில், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன்கள், 4 கோடிக்கும் அதிகமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, வருமான வரித் துறையின் அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளதாவது: கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி ரிட்டர்ன்கள், இதுவரை 4 கோடிக்கும் அதிகமாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 21ம் தேதியன்று மட்டும், கிட்டத்தட்ட 8.7 லட்சம் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 31ம் தேதியுடன் ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு முடிவடைகிறது. இதையடுத்து, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 46.77 லட்சம் ரிட்டர்ன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.காலக்கெடு முடிவடைய இருக்கும் நிலையில், ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருப்பவர்களுக்கு, அது குறித்து குறுஞ்செய்திகள் வாயிலாக நினைவூட்டப்பட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|