பதிவு செய்த நாள்
22 டிச2021
21:27
திருப்பூர்:திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 32 ஆயிரம் கோடி ரூபாயை எட்டிப்பிடித்துவிடும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
கடந்த 2019 –- 20 நிதியாண்டில், திருப்பூரின் ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனாவால், 27 ஆயிரத்து, 280 கோடிக்கு தான் வர்த்தகம் நடந்தது. கடந்த 2020 -– 21 நிதியாண்டிலும், 24 ஆயிரத்து 750 கோடி ரூபாயாக பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவையே சந்தித்தது.
கொரோனா அலை ஓய்ந்ததால், தற்போது ஆர்டர்கள் அதிகளவில் வருகின்றன. நடப்பு, 2021-– 22 நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாதங்களில், திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகம், 20 ஆயிரத்து, 454 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அதிகளவு ஆர்டர் வருகின்றன. நிதியாண்டு முடிவடைய இன்னும் நான்கு மாதங்கள் உள்ளன. இதனால், நடப்பு நிதியாண்டுக்கான வர்த்தகம், 32 ஆயிரம் கோடியை எட்டிப்பிடிக்கும் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஜவுளி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|