பதிவு செய்த நாள்
23 டிச2021
20:17
புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹீரோ மோட்டோகார்ப்’, அதன் தயாரிப்புகளின் விலையை, ஜனவரியிலிருந்து உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
உள்ளீட்டு பொருட்களின் விலை அதிகரித்து வருவதை அடுத்து, அதை சமாளிக்கும் விதமாக, இந்நிறுவனம், அதன் அனைத்து மாடல் வாகனங்களுடைய விலையை, 2 ஆயிரம் ரூபாய் வரை அதிகரிக்க உள்ளது. இந்த விலை உயர்வு, வரும் ஜனவரி 4ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என்றும்; இதன் வாயிலாக உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு பிரச்னையை ஓரளவுக்கு சமாளிக்க இயலும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.போக்ஸ்வேகன் இதேபோல், கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘போக்ஸ்வேகன்’ நிறுவனமும், ஜனவரி முதல் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்நிறுவன தயாரிப்புகளான ‘போலோ, வென்டோ, டைகுன்’ ஆகிய கார்களின் விலை உயர்த்தபட உள்ளது. மாடலைப் பொறுத்து, விலை உயர்வு 2 – 5 சதவீதம் இருக்கும் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.ஏற்கனவே, ‘மாருதி சுசூகி, டாடா மோட்டார்ஸ், டொயோட்டா, ஹோண்டா’ என பல கார் நிறுவனங்கள் ஜனவரியிலிருந்து விலையை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|