பதிவு செய்த நாள்
23 டிச2021
20:26
மும்பை:நடப்பு ஆண்டில், சந்தையில் இதுவரை 63 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளதாக, ‘பிரைம் டேட்டாபேஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இதுவரை இல்லாத வகையில், மிக அதிகபட்சமாக, நடப்பு ஆண்டில் மட்டும், இதுவரை 63 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக இவை மொத்தம் 1.18 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன.இது, கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 4.5 மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் 15 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்து, 27 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டின. நடப்பு ஆண்டு பங்கு வெளியீட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், சில்லரை விற்பனை நிறுவனங்கள் ஆகியவை முக்கிய இடம் வகித்துஉள்ளன.அத்துடன், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கடந்த ஆண்டு களை விட அதிகரித்துஉள்ளதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பட்டியலிடப்பட்ட நாளின் முடிவு விலையை வைத்து பார்க்கும்போது, 34 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் 10 சதவீதத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டி தந்துஉள்ளன. இந்த போக்கு மேலும் அதிகரிக்கும். தற்சமயம் 35 நிறுவனங்கள் பங்குவெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை ‘செபி’யிடம் வாங்கி வைத்துள்ளன.
மேலும் 33 நிறுவனங்கள் அனுமதி பெறுவதற்காக, செபிக்கு விண்ணப்பித்து உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|