இந்தியாவில் ‘லேப்டாப்’ தயாரிப்பு எச்.பி., நிறுவனம் துவக்கியது இந்தியாவில் ‘லேப்டாப்’ தயாரிப்பு எச்.பி., நிறுவனம் துவக்கியது ...  தொழில் முனைவோர்  19 பேருக்கு மானியம் தொழில் முனைவோர் 19 பேருக்கு மானியம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
63 புதிய பங்கு வெளியீடுகள்:1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 டிச
2021
20:26

மும்பை:நடப்பு ஆண்டில், சந்தையில் இதுவரை 63 புதிய பங்கு வெளியீடுகள் வாயிலாக, 1.18 லட்சம் கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளதாக, ‘பிரைம் டேட்டாபேஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இதுவரை இல்லாத வகையில், மிக அதிகபட்சமாக, நடப்பு ஆண்டில் மட்டும், இதுவரை 63 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வந்துள்ளன. இதன் வாயிலாக இவை மொத்தம் 1.18 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன.இது, கடந்த 2020ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட 4.5 மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டில் 15 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுக்கு வந்து, 27 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டின. நடப்பு ஆண்டு பங்கு வெளியீட்டில், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், சில்லரை விற்பனை நிறுவனங்கள் ஆகியவை முக்கிய இடம் வகித்துஉள்ளன.அத்துடன், சில்லரை முதலீட்டாளர்களின் பங்கேற்பு, கடந்த ஆண்டு களை விட அதிகரித்துஉள்ளதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும்.
பட்டியலிடப்பட்ட நாளின் முடிவு விலையை வைத்து பார்க்கும்போது, 34 நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் 10 சதவீதத்துக்கும் அதிகமான வருவாயை ஈட்டி தந்துஉள்ளன. இந்த போக்கு மேலும் அதிகரிக்கும். தற்சமயம் 35 நிறுவனங்கள் பங்குவெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை ‘செபி’யிடம் வாங்கி வைத்துள்ளன.
மேலும் 33 நிறுவனங்கள் அனுமதி பெறுவதற்காக, செபிக்கு விண்ணப்பித்து உள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)