பதிவு செய்த நாள்
23 டிச2021
20:32
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாயை எட்டும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான, எப்.ஐ.இ.ஓ., தெரிவித்து உள்ளது.
மேலும், அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி 34.50 – 35.63 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இது குறித்து, இவ்வமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:நடப்பு ஆண்டில் நாட்டின் ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாய் என்ற நிலையை எட்டும்.அடுத்த நிதியாண்டில், புதிய வகை கொரோனா பரவல் மற்றும் வினியோக பிரிவுகளில் இருக்கும் சவால்கள் ஆகியவை காரணமாக, 34.50 – 35.63 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருக்கும் என கருதுகிறோம்.நம் ஏற்றுமதியை பொறுத்தளவில் நல்ல விஷயம் எதுவென்றால், பாரம்பரிய மற்றும் புதிய துறைகளில் ஏற்றுமதி வளர்ச்சி மிகவும் சீராக உள்ளது என்பது தான்.
இந்தப் போக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம். அனைத்து ஏற்றுமதி பிரிவிலும், ஆர்டர்களுக்கான முன்பதிவு நிலை ஊக்கமூட்டுவதாக உள்ளது.மேலும், உலகளாவிய நிறுவனங்கள், சீனாவை மட்டும் சார்ந்திருக்க கூடாது என்ற கொள்கை முடிவை கொண்டிருப்பதும், ஏற்றுமதி வளர்ச்சிக்கு உதவுவதாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|