பதிவு செய்த நாள்
26 டிச2021
19:03
இந்த ஆண்டு பொது பங்கு வெளியீடு வாயிலாக வர்த்தக நிறுவனங்கள் 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக நிதி திரட்டியிருப்பதும், இவற்றில் சில்லரை முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்கேற்றதும் தெரிய வந்துள்ளது.
ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகளை, இந்த ஆண்டு 63 நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.இந்த வெளியீடுகளால் மொத்தம் 1 லட்சத்து 18 ஆயிரத்து 704 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் பொது பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்பட்ட தொகையை விட இது நான்கு மடங்காகும்.
மேலும் இதற்கு முன், 2017ம் ஆண்டில் 68 ஆயிரத்து 827 கோடி ரூபாய் பங்கு வெளியீட்டில் திரட்டப்பட்டது. அதைவிட இந்த ஆண்டு இரண்டு மடங்கு திரட்டப்பட்டு உள்ளது. இந்த நிறுவனங்களில் தரவுகள் உள்ள 59 வெளியீடுகளில், 36 நிறுவனங்கள் 10 மடங்கிற்கு மேல் விண்ணப்பம் பெற்று உள்ளன.
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் அதிக அளவில் சந்தைக்கு வந்திருப்பது, சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் பங்குகளை வாங்கியது ஆகியவை, பங்கு வெளியீட்டில் அதிக நிதி திரட்டப்பட முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|