பதிவு செய்த நாள்
28 டிச2021
09:44
புதுடில்லி : தனியார் துறையைச் சேர்ந்த எச்.டி.எப்.சி., வங்கி, அதன் வர்த்தகத்தை கிராமப்புறங்களில் விரிவுபடுத்த, இந்தியா போஸ்ட் பேமன்ட்ஸ் வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
அஞ்சல் துறையின், இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி, 650 கிளைகளுடன் நாடு முழுதும் ஒரு லட்சத்து 36 ஆயிரம் வங்கிச் சேவை முனையங்களுடன், 24 மணி நேரம் செயல்பட்டு வருகிறது. மஹாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு, இவ்வங்கிக் கணக்கு வாயிலாக ஊதியம் வழங்கப்படுகிறது.
இவ்வங்கி, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள், கிராம சேவகர்கள் ஆகியோருக்கு 'மைக்ரோ ஏ.டி.எம்., மற்றும் பயோமெட்ரிக்' சாதனங்களை வழங்கி, வங்கிகள் இல்லாத கிராமப்புறங்களில் வீடு தேடி நிதிச் சேவைகளை அளித்து வருகிறது. இவ்வங்கியுடன் இணைந்து நிதிச் சேவைகள் வழங்குவதற்காக, எச்.டி.எப்.சி., வங்கி ஒப்பந்தம் செய்துள்ளது.
கிராமப்புறங்களில் இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கியின் வலுவான கட்டமைப்பை பயன்படுத்தி, கடன் அட்டை, வீட்டு கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட நிதிச் சேவைகள் வர்த்தகத்தை விரிவுபடுத்த உள்ளதாக, எச்.டி.எப்.சி., வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|