பதிவு செய்த நாள்
29 டிச2021
02:21
புதுடில்லி:வர்த்தக ரீதியிலான ‘5ஜி’ சேவை, இந்தியாவில், சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் வழங்கப்பட இருப்பதாக தொலைதொடர்பு துறை அறிவித்து உள்ளது.
டில்லி, மும்பை, சென்னை, புனே, குருகிராம், கோல்கட்டா, பெங்களூரு, ஹைதராபாத், சண்டிகர், லக்னோ, ஜாம்நகர், ஆகமதாபாத், காந்திநகர் ஆகிய நகரங்களில், அடுத்த ஆண்டில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தொலைதொடர்பு துறை தெரிவித்துள்ளது.இந்த 5ஜி சேவையை ‘ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா’ ஆகிய மூன்று நிறுவனங்கள் வழங்க உள்ளன.
இதற்கிடையே, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ அமைப்பு, 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடர்பான விலை நிர்ணயம், மதிப்பீடு போன்ற பல்வேறு விவகாரங்களில் தொழில்துறையின் கருத்துகளைப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்த சேவையை அறிமுகம் செய்வதில் அரசு தீவிரமாக இருப்பினும், தொலைபேசி சேவைகளை, வழங்கி வரும் நிறுவனங்கள் எவ்வளவு துாரம் ஆர்வம் காட்டுகின்றன என்பதை பொறுத்தே, சேவை விரைவில் அறிமுகம் ஆகும் என, அரசு தரப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|