பதிவு செய்த நாள்
30 டிச2021
19:44
புதுடில்லி:நாட்டின் ஏற்றுமதி, அடுத்த நிதியாண்டில் நல்ல வளர்ச்சியை எட்டும் என, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பான எப்.ஐ.இ.ஓ., தெரிவித்துள்ளது.
அடுத்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 39.75 லட்சம் ரூபாய் அளவுக்கு அதிகரிக்கும் என இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து இவ்வமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஏற்றுமதியாளர்களுக்கு அதிக அளவிலான ஆர்டர்கள் வருகின்றன. இதை அடுத்து அடுத்த நிதியாண்டில் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும்.
அத்துடன், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளதை அடுத்து, அது சம்பந்தமான துறைகளிலும் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.நடப்பு நிதியாண்டில், ஏற்றுமதி 30 லட்சம் கோடி ரூபாயை தாண்டிவிடும் எனக் கருதப்படுகிறது.
எனவே, அடுத்த நிதியாண்டில் 39.75 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை அடையும் வகையில் நாம் செயல்பட வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|