பதிவு செய்த நாள்
30 டிச2021
19:51
மும்பை:நஷ்டத்தில் தரை இறங்கிய ‘ஏர் இந்தியா’வை, ‘டாடா சன்ஸ்’ வாங்கியிருக்கும் நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க தயாராக இருப்பதாக வங்கிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகள் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியாவை கையகப்படுத்துவதற்கு தேவையான 18 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஆரம்ப இயக்க செலவுகளுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் என, மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, வங்கிகளிடம் வாங்கும் முயற்சியில், டாடா சன்ஸ் ஏற்கனவே இறங்கி உள்ளது.
இது குறித்து வங்கி உயரதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:ஏர் இந்தியாவை நடத்துவதற்காக, 4.25 சதவீத வட்டியில், 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் 3 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்க தயாராக இருக்கின்றன.
ஒவ்வொரு வங்கியிலிருந்தும் டாடா எவ்வளவு கடன் வாங்க உள்ளது என்பது ஜனவரி மத்தியில் முடிவு செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையே மத்திய அரசு, ஏர் இந்தியாவை, டிசம்பருக்குள் டாடா வசம் முழுமையாக ஒப்படைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தள்ளிப்போகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|