மிளிரப் போகும் தங்கம்  புத்தாண்டில் விலை அதிகரிக்கும் மிளிரப் போகும் தங்கம் புத்தாண்டில் விலை அதிகரிக்கும் ...  பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது ...
‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
19:51

மும்பை:நஷ்டத்தில் தரை இறங்கிய ‘ஏர் இந்தியா’வை, ‘டாடா சன்ஸ்’ வாங்கியிருக்கும் நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்க தயாராக இருப்பதாக வங்கிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிகள் ஏற்கனவே ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கியவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவை கையகப்படுத்துவதற்கு தேவையான 18 ஆயிரம் கோடி ரூபாய் மற்றும் ஆரம்ப இயக்க செலவுகளுக்காக 5 ஆயிரம் கோடி ரூபாய் என, மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் கடனை, வங்கிகளிடம் வாங்கும் முயற்சியில், டாடா சன்ஸ் ஏற்கனவே இறங்கி உள்ளது.
இது குறித்து வங்கி உயரதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:ஏர் இந்தியாவை நடத்துவதற்காக, 4.25 சதவீத வட்டியில், 35 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வழங்க வங்கிகள் தயாராக இருக்கின்றன. பஞ்சாப் நேஷனல் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகள் 3 ஆயிரம் கோடி ரூபாயிலிருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வழங்க தயாராக இருக்கின்றன.
ஒவ்வொரு வங்கியிலிருந்தும் டாடா எவ்வளவு கடன் வாங்க உள்ளது என்பது ஜனவரி மத்தியில் முடிவு செய்யப்பட்டு விடும் என தெரிகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையே மத்திய அரசு, ஏர் இந்தியாவை, டிசம்பருக்குள் டாடா வசம் முழுமையாக ஒப்படைத்துவிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது மேலும் தள்ளிப்போகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)