பதிவு செய்த நாள்
30 டிச2021
19:56
மும்பை:வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், கே.ஒய்.சி., எனப்படும், வாடிக்கையாளரை அறிந்து கொள்ளும் படிவத்தை புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஒமைக்ரான் குறித்த நிச்சயமற்ற சூழலில், கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிக்காத வாடிக்கையாளர்கள் மீது, நடப்பு நிதியாண்டு இறுதி வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி உள்ளது.
ஏற்கனவே, கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை அடுத்து, வாடிக்கையாளர்கள் கே.ஒய்.சி., படிவத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, டிசம்பர் இறுதி வரை நீட்டித்து அறிவித்திருந்தது, ரிசர்வ் வங்கி.
இப்போது ஒமைக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில், படிவத்தை புதுப்பிப்பதற்கான அவகாசத்தை, அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|