‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ‘ஏர் இந்தியா’வை பறக்க வைக்க ‘டாடா’வுக்கு வங்கி கடன் ரெடி ...  பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது பிரிட்டனின் ‘பேட்டரி’ நிறுவனம் ‘ரிலையன்ஸ்’ வசம் வந்தது ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘வால்வோ’ கார் நிறுவனமும் விலை உயர்வை அறிவித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
20:27

புதுடில்லி:ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, ‘வால்வோ கார் இந்தியா’ ஜனவரி முதல் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில், வால்வோ நிறுவனமும் சேர்ந்துள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எஸ்.யு.வி., எக்ஸ்.சி.40 டி.ஆர்., மாடல் காரின் விலை 2 லட்சம் ரூபாய் அதிகரித்து, 43.25 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே போல், எக்ஸ்.சி.60 பி.5 காரின் விலை 1.6 அதிகரித்து, 63.5 லட்சம் ரூபாயாக உயரும்.
இந்நிறுவனத்தின் ‘செடான்’ வகை காரான எஸ்.90 காரின் விலை, 3 லட்சம் ரூபாய் உயர்ந்து, 64.9 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு, அன்னிய செலாவணி ஏற்ற இறக்கம், உலகளவிலான வினியோகத்தில் உள்ள பிரச்னைகள், தொற்று பரவல் குறித்த கட்டுப்பாடுகள் என பல்வேறு காரணங்களால், விலையை உயர்த்தி இருப்பதாக, வால்வோ கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)