பதிவு செய்த நாள்
30 டிச2021
20:27
புதுடில்லி:ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான, ‘வால்வோ கார் இந்தியா’ ஜனவரி முதல் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து உள்ளது.
ஏற்கனவே பெரும்பாலான வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஜனவரியிலிருந்து விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த வரிசையில், வால்வோ நிறுவனமும் சேர்ந்துள்ளது.தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களின் விலையை, 1 லட்சம் ரூபாயிலிருந்து, 3 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்க இருப்பதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த விலை உயர்வு நாளை முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து, எஸ்.யு.வி., எக்ஸ்.சி.40 டி.ஆர்., மாடல் காரின் விலை 2 லட்சம் ரூபாய் அதிகரித்து, 43.25 லட்சம் ரூபாயாக இருக்கும். இதே போல், எக்ஸ்.சி.60 பி.5 காரின் விலை 1.6 அதிகரித்து, 63.5 லட்சம் ரூபாயாக உயரும்.
இந்நிறுவனத்தின் ‘செடான்’ வகை காரான எஸ்.90 காரின் விலை, 3 லட்சம் ரூபாய் உயர்ந்து, 64.9 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.உள்ளீட்டு பொருட்கள் விலை உயர்வு, அன்னிய செலாவணி ஏற்ற இறக்கம், உலகளவிலான வினியோகத்தில் உள்ள பிரச்னைகள், தொற்று பரவல் குறித்த கட்டுப்பாடுகள் என பல்வேறு காரணங்களால், விலையை உயர்த்தி இருப்பதாக, வால்வோ கார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|