பதிவு செய்த நாள்
02 ஜன2022
22:15
வங்கிக் கணக்கு தொடர்பான கே.ஒய்.சி., தகவல்களை புதுப்பிப்பது தொடர்பான கால அவகாசத்தை, இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது.
வாடிக்கையாளர்களை பற்றிய தகவல்களை அளிக்கும் கே.ஒய்.சி., நடைமுறையின் படி, வங்கி வாடிக்கையாளர்கள் பான் கார்டு, முகவரி சான்றிதழ் உள்ளிட்ட அண்மை தகவல்களை வங்கி கேட்டுக் கொள்வதன் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும்.கடந்த ஆண்டு மார்ச் மாதம், கே.ஒய்.சி., தகவல்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை ஆண்டு இறுதி வரை நீட்டித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக இந்த அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 2022 மார்ச் மாதம் இறுதி வரை கே.ஒய்.சி., தகவல்களை சமர்ப்பிக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.எனினும், வருமான வரி தாக்கல் செய்வது தொடர்பான கால அவகாசம் நீட்டிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் வரித் தாக்கல் செய்யத் தவறியவர்கள், மூன்று மாத காலத்திற்குள் தாமதமாக வரித் தாக்கல் செய்யலாம். இதற்கென உரிய படிவத்தின் வாயிலாக வரித் தாக்கல் செய்யலாம். இதற்கு தாமதகட்டணம் பொருந்தும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|