பதிவு செய்த நாள்
04 ஜன2022
09:30
ஏற்றுமதி 37 சதவீதம் உயர்வு
கடந்த டிசம்பரில் நாட்டின் ஏற்றுமதி 37 சதவீதம் அதிகரித்து, 2.76 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நடைபெற்றுள்ளது என, மத்திய வர்த்தக துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 22.20 லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளதாகவும் அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
சர்க்கரை உற்பத்தி அதிகரிப்பு
நாட்டின் சர்க்கரை உற்பத்தி, அக்டோபர் – டிசம்பர் மாத காலத்தில், 4.75 சதவீதம் அதிகரித்து, 116 லட்சம் டன் ஆக அதிகரித்து உள்ளது. இதற்கு முந்தைய பருவ ஆண்டின் இதே காலத்தில் உற்பத்தி, 110 லட்சம் டன் ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்ரீராம்’ மெகா செயலி
நிதி சேவைகளை வழங்குவதற்கு வசதியாக, ‘ஸ்ரீராம் சிட்டி யூனியன் பைனான்ஸ்’ நிறுவனம், மெகா செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளது.ஏற்கனவே ‘பஜாஜ் பைனான்ஸ்’ நிறுவனம், இதே போல் ஒரு மெகா செயலியை அறிமுகம் செய்யும் முயற்சியில் உள்ள நிலையில், தற்போது ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனமும் இறங்கி உள்ளது.
ஏற்றத்தில் துவங்கிய புத்தாண்டு
புத்தாண்டின் முதல் வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்தை கண்டுள்ளன. மும்பை பங்குச் சந்தையின் ‘சென்செக்ஸ்’ 929 புள்ளிகள் அதிகரித்து, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதி வர்த்தக நாளான வெள்ளிக்கிழமை அன்றும் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன. புத்தாண்டின் முதல் நாளிலும் அது தொடர்ந்துள்ளது.
பணியாளர்கள் வாங்கிய பங்குகள்
விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ள நிலையில், அதன் ஊழியர்கள் மற்றும் முன்னாள் பணியாளர்கள், நிறுவனத்தின் 3 கோடி பங்குகளை வாங்கி உள்ளனர். ஊழியர்களுக்கான பங்கு விருப்ப திட்டத்தின் கீழ், இவர்கள் இந்த பங்குகளை வாங்கி இருப்பதாக, ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு, ஓயோ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|