பதிவு செய்த நாள்
04 ஜன2022
09:32
புதுடில்லி : நடப்பு ஆண்டில், மார்ச் மாதத்துடன் முடிவடையும் முதல் மூன்று மாதங்களில் மட்டும், 23 நிறுவனங்கள் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர, வரிசை கட்டி நிற்கின்றன.
பங்கு வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனங்கள் மொத்தம் 44 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளன. இவற்றில் பெருமளவு நிதியை, தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் திரட்ட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.கடந்த 2021ம் ஆண்டில் மட்டும், கொரோனா தடைகளையும் மீறி, 63 நிறுவனங்கள், புதிய பங்குகளை வெளியிட்டு 1.2 லட்சம் கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.
இந்த நிறுவனங்கள் தவிர, ‘பவர்கிரிட் உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளை’ மற்றும் ‘புரூக்பீல்டு இந்தியா ரியல் எஸ்டேட் அறக்கட்டளை’ ஆகியவை 11 ஆயிரத்து, 535 கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இந்த போக்கு நடப்பு புதிய ஆண்டிலும் தொடர்கிறது.
பட்டியலிடப்படுவதால் அடையும் லாபம், அதீத பணப்புழக்கம், சில்லரை முதலீட்டாளர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது ஆகியவை, இந்த போக்குக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.மார்ச் காலாண்டில்,‘ஓயோ, அதானி வில்மார், எம்கியூர் பார்மசூட்டிக்கல்’ என பல முன்னணி நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு வருகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|