பதிவு செய்த நாள்
04 ஜன2022
09:39
புதுடில்லி : ‘ஐ.எச்.எஸ்., மார்கிட்’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டு பிரிவுகளைச் சேர்ந்த, 400 நிறுவனங்களின், டிசம்பர் மாத தயாரிப்பு நிலவரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த டிசம்பரில் மிதமான வளர்ச்சியை கண்டுள்ளது.வினியோகத்தில் சிக்கல்கள், கொரோனா பாதிப்பு, பணவீக்கம் ஆகியவற்றால் வணிக நம்பிக்கைகள் சற்று பாதிக்கப்பட்டாலும், வளர்ச்சி காணப்பட்டுஉள்ளது. டிசம்பரில் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சிக்கான பி.எம்.ஐ., குறியீடு 55.5 புள்ளிகளாக உள்ளது.
கடந்த நவம்பரில் இது 57.6 புள்ளிகளாக இருந்தது.‘பி.எம்.ஐ.,’ குறியீடு, 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந்தால், சரிவைக் குறிக்கும்.டிசம்பர் மாதத்திலும் குறியீடு 50 புள்ளிகளுக்கு மேல் இருந்ததை அடுத்து, கடந்த ஆறாவது மாதமாக தொடர்ச்சியான முன்னேற்றம் காணப்பட்டிருக்கிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.எச்.எஸ்.,மார்க்கிட் நிறுவனத்தின் பொருளாதார துணை இயக்குனர் பொலியானா டி லிமா, “டிசம்பர் மாத உயர்வு, இந்திய தயாரிப்பு துறைக்கு உத்வேகம் அளிப்பதாக உள்ளது. வெளிநாடுகளிலிருந்து ஆர்டர்கள் கிடைத்து வருவதன் காரணமாக, பொருளாதார மீட்சி தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|