ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு தற்காலிக தலைவராக அல்கா மித்தல் நியமனம் ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு தற்காலிக தலைவராக அல்கா மித்தல் நியமனம் ...  ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ...
இன்டர்நெட் வசதி இல்லாமலும் இனி பணம் அனுப்பலாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜன
2022
22:03

மும்பை:நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிக்க, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இருப்பினும், இன்னும் கிராமப் பகுதிகளில் எளிய மக்களிடம் போதுமான அளவுக்கு அதிகரிக்கவில்லை. இதையடுத்து, இப்பகுதிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க உதவும் வகையில், ஆப்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை ரிசர்வ் வங்கி வழங்கி உள்ளது.
ஆப்லைன் பரிவர்த்தனை என்பது, இண்டர்நெட் இணைப்பு அல்லது மொபைல் நெட்வொர்க் எதுவும் இல்லாமல், பணத்தை அனுப்பவதற்கான வழியாகும். இந்த ஆப்லைன் பரிமாற்றத்தில், பணத்தை, ‘பேஸ் டு பேஸ்’ எனும் பிராக்ஸி மோடில் கார்டு, வாலட், மொபைல் போன் போன்றவற்றின் வழியாக அனுப்ப முடியும்.இதற்கு, ஓ.டி.பி., எனும் ஒரு முறை கடவுச் சொல் எல்லாம் தேவைப்படாது. ஆன்லைனில் இல்லாமல், ஆப்லைனில் அனுப்புவதால், பரிவர்த்தனை குறித்த குறுஞ்செய்தி எச்சரிக்கை தாமதமாகவே கிடைக்கும்.
இந்த ஆப்லைன் சேவை வாயிலாக, அதிகபட்சமாக ஒரு தடவையில் 200 ரூபாய் வரை அனுப்பலாம். இப்படி அதிகபட்சமாக 2,000 ரூபாய் வரை அனுப்பலாம். பேலன்ஸ் இல்லாவிட்டால், மறுபடி ஆன்லைன் வாயிலாக இரண்டாயிரம் ரூபாயை நிரப்பி வைத்துக் கொள்ளலாம். ஆப்லைன் பணப் பரிவர்த்தனைக்கான பரிசோதனை முயற்சிகள், கடந்த 2020 செப்டம்பர் முதல் 2021 ஜூன் வரையிலான காலத்தில் நடத்தப்பட்டு, அதன் பின் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இந்த சேவை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)