பதிவு செய்த நாள்
05 ஜன2022
21:28
புதுடில்லி:அடுத்த மாதம் முதல், உடனடி பணப் பரிவர்த்தனை சேவையான ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை அனுப்புவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என எஸ்.பி.ஐ., அறிவித்து உள்ளது.
தற்போது 2 லட்சம் ரூபாய் வரை, ஐ.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக கட்டணம் எதுவும்இன்றி பணம் அனுப்பலாம்.ஊக்குவிப்புஇந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப கட்டணம் எதுவும் அடுத்த மாதம் முதல் வசூலிக்கப்பட மாட்டாது என வங்கி தெரிவித்துள்ளது.
‘இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ’ போன்ற எதிலிருந்து பணம் அனுப்பினாலும் கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வசூலிப்பு
அதேசமயம், யாராவது வங்கி கிளைகளுக்கு சென்று, அங்கிருந்து ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக பணம் அனுப்பும்பட்சத்தில் 1,000 ரூபாய் வரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2 லட்சம் ரூபாய் வரை அவ்வாறு அனுப்புவதென்றால், அதற்கு 2 ரூபாயிலிருந்து 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணமாக பிப்ர வரி 1ம் தேதியிலிருந்து வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
ஆனால் இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தி ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்புவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் எஸ்.பி.ஐ., அறிவித்து உள்ளது.
என்.இ.எப்.டி., வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. இதுவே வங்கி கிளைகள் வாயிலாக செய்யப்படும்போது, 2–20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்என்றும் அறிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|