ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ஒமைக்ரானுக்கு தனி இன்சூரன்ஸ் தேவை இல்லை ...  அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
எஸ்.பி.ஐ.,யில் பண பரிவர்த்தனை ரூ.5 லட்சம் வரை கட்டணமில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
21:28

புதுடில்லி:அடுத்த மாதம் முதல், உடனடி பணப் பரிவர்த்தனை சேவையான ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக, 5 லட்சம் ரூபாய் வரை பணத்தை அனுப்புவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என எஸ்.பி.ஐ., அறிவித்து உள்ளது.
தற்போது 2 லட்சம் ரூபாய் வரை, ஐ.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக கட்டணம் எதுவும்இன்றி பணம் அனுப்பலாம்.ஊக்குவிப்புஇந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்ப கட்டணம் எதுவும் அடுத்த மாதம் முதல் வசூலிக்கப்பட மாட்டாது என வங்கி தெரிவித்துள்ளது.
‘இன்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், யோனோ’ போன்ற எதிலிருந்து பணம் அனுப்பினாலும் கட்டணம் கிடையாது என தெரிவித்துள்ளது.
ஜி.எஸ்.டி., வசூலிப்பு
அதேசமயம், யாராவது வங்கி கிளைகளுக்கு சென்று, அங்கிருந்து ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக பணம் அனுப்பும்பட்சத்தில் 1,000 ரூபாய் வரை கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.ஆயிரம் ரூபாய்க்கு மேல் 2 லட்சம் ரூபாய் வரை அவ்வாறு அனுப்புவதென்றால், அதற்கு 2 ரூபாயிலிருந்து 12 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி., கட்டணமாக பிப்ர வரி 1ம் தேதியிலிருந்து வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுஉள்ளது.
ஆனால் இன்டர்நெட் பேங்கிங் அல்லது மொபைல் பேங்கிங் வசதியை பயன்படுத்தி ஐ.எம்.பி.எஸ்., வாயிலாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்புவதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது என்றும் எஸ்.பி.ஐ., அறிவித்து உள்ளது.
என்.இ.எப்.டி., வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது. இதுவே வங்கி கிளைகள் வாயிலாக செய்யப்படும்போது, 2–20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி., வசூலிக்கப்படும்என்றும் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)