அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ அரசின் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது ‘கெய்ர்ன்’ ...  வருமான வரி  ரூ.1.50 லட்சம் கோடி வருமான வரி ரூ.1.50 லட்சம் கோடி ...
‘ஹீரோ’ பிராண்டு பெயர் நீதிமன்றத்தில் முறையீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2022
21:37

புதுடில்லி:‘ஹீரோமோட்டோகார்ப்’ நிறுவனம், ‘ஹீரோ’ எனும் பிராண்டு பெயரை, அதன் மின்சார வாகன பிரிவுக்கு பயன்படுத்தக்கூடாது என, ‘ஹீரோ எலக்ட்ரிக்’ நிறுவனம் நீதிமன்றம் சென்றுள்ளது.
அண்மைக்காலமாக மின்சார வாகன தயாரிப்புகள் சூடுபிடித்து வரும் நிலையில், முஞ்சால் குடும்பத்தினரிடையே ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.முஞ்சால் குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டு, விஜய் முஞ்சால் மற்றும் நவீன் முஞ்சால் ஆகியோர் ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தை பெற்றனர்.
பவன் முஞ்சால், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஆனார்.விஜய் மற்றும் நவீன் முஞ்சால், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தை, கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமும் மின்சார வாகன தயாரிப்பில் இறங்குவதாக அறிவித்துள்ளது.
இதையடுத்தே, ஹீரோ எனும் பிராண்டு பெயரை, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் மின்சார வாகன பிரிவுக்கு பயன்படுத்தக்கூடாது என நீதிமன்றம் சென்றுள்ளது, ஹீரோ எலக்ட்ரிக்.கடந்த காலங்களில், மின்வாகனம் குறித்த எழுச்சி எதுவும் பெரிதாக ஏற்படாததால், பிராண்டு பெயர் குறித்த எந்த சிக்கலும் ஏற்படாமல் இருந்தது.
ஆனால், தற்போது மின் வாகன தயாரிப்பில் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளதை அடுத்து, அதற்கான சந்தையும் சூடுபிடித்து வருகிறது.இதன் தொடர்ச்சியாக ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனமும், மார்ச்சில் மின்சார வாகனத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து இப்போது பிரச்னை எழுந்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)