பதிவு செய்த நாள்
05 ஜன2022
21:49
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் வருமான வரி ரீபண்டாக இதுவரை 1.50 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாக வருமான வரி துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2020 – 21ம் ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு, நடப்பு நிதியாண்டில் கடந்த 3ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம் 1.50 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு வழங்கப்பட்டுள்ளது.இதில் கிட்டத்தட்ட 1.46 கோடி வருமான வரி தாக்கல்களுக்கு, 51 ஆயிரத்து 194 கோடி ரூபாய் ரீபண்டாக வழங்கப்பட்டு உள்ளது.
கார்ப்பரேட் வரியை பொறுத்தவரை, 2.19 லட்சம் தாக்கல்களுக்கு மொத்தம் 99 ஆயிரத்து 213 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என வருமான வரி துறை அறிவித்துள்ளது.மேலும் கிட்டத்தட்ட 5.62 கோடிக்கும் அதிகமானோர், கடந்த நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|