மின் வாகன தயாரிப்பில் இறங்கியது ‘சோனி’ மின் வாகன தயாரிப்பில் இறங்கியது ‘சோனி’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தால் 13.5 லட்சம் நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜன
2022
20:51

புதுடில்லி:மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு, திவால் நிலைக்கு செல்லாமல் 13.5 லட்சம் நிறுவனங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றும்; 1.5 கோடி பேரின் வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ‘எஸ்.பி.ஐ., ரிசர்ச்’ அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஊக்கத் திட்டம்
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கவும், 2020ம் ஆண்டில் மத்திய அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். கொரோனா காலத்தில், மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்ட மிகப்பெரிய ஊக்கத் திட்டம் இதுவாகும்.
இத்திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 13.5 லட்சம் நிறுவனங்கள் திவால் ஆகாமல் தடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளன என எஸ்.பி.ஐ., ரிசர்ச் தெரிவித்துள்ளது.
பலன்
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த நிறுவனங்களில் கிட்டத்தட்ட 93.7 சதவீத நிறுவனங்கள், குறு மற்றும் சிறு நிறுவனங்கள். மேலும், 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிறுவனங்களின் கடன் கணக்குகள், வாராக் கடனாக மாறாமல் தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளன.
எங்கள் ஆய்வின்படி, இந்த நிறுவனங்கள் வாராக் கடன் நிலைக்கு சென்றிருந்தால், 1.5 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பர்.இந்த வகையில், இந்த திட்டத்தின் வாயிலாக, ஆறு கோடி குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தால் அதிக பலன் அடைந்த மாநிலம் குஜராத். இதையடுத்து மஹாராஷ்டிரா, தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)