பதிவு செய்த நாள்
06 ஜன2022
20:51
புதுடில்லி:மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு, திவால் நிலைக்கு செல்லாமல் 13.5 லட்சம் நிறுவனங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றும்; 1.5 கோடி பேரின் வேலைகள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும், ‘எஸ்.பி.ஐ., ரிசர்ச்’ அறிக்கை தெரிவித்து உள்ளது.
ஊக்கத் திட்டம்
நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கவும், 2020ம் ஆண்டில் மத்திய அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவும் பொருட்டு, அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தை அறிவித்தது. இதன்படி, நிறுவனங்கள் எந்த பிணையும் இன்றி, வங்கிகளில் கடன் பெற்றுக் கொள்ள முடியும். கொரோனா காலத்தில், மத்திய நிதியமைச்சகம் மேற்கொண்ட மிகப்பெரிய ஊக்கத் திட்டம் இதுவாகும்.
இத்திட்டத்தின் கீழ், கிட்டத்தட்ட 13.5 லட்சம் நிறுவனங்கள் திவால் ஆகாமல் தடுக்கப்பட்டு, காப்பாற்றப்பட்டுள்ளன என எஸ்.பி.ஐ., ரிசர்ச் தெரிவித்துள்ளது.
பலன்
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தாவது:இத்திட்டத்தின் கீழ் பயனடைந்த நிறுவனங்களில் கிட்டத்தட்ட 93.7 சதவீத நிறுவனங்கள், குறு மற்றும் சிறு நிறுவனங்கள். மேலும், 1.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்நிறுவனங்களின் கடன் கணக்குகள், வாராக் கடனாக மாறாமல் தடுத்து காப்பாற்றப்பட்டுள்ளன.
எங்கள் ஆய்வின்படி, இந்த நிறுவனங்கள் வாராக் கடன் நிலைக்கு சென்றிருந்தால், 1.5 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்திருப்பர்.இந்த வகையில், இந்த திட்டத்தின் வாயிலாக, ஆறு கோடி குடும்ப உறுப்பினர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
இந்த திட்டத்தால் அதிக பலன் அடைந்த மாநிலம் குஜராத். இதையடுத்து மஹாராஷ்டிரா, தமிழகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பலனடைந்துள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|