பதிவு செய்த நாள்
07 ஜன2022
23:17
புதுடில்லி:கொரோனா பரவலால் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்படும் பிரச்னைகளை தீர்த்து வைப்பதற்காக, மத்திய வர்த்தக அமைச்சகம், கொரோனா உதவி மையத்தை மீண்டும் துவக்கி உள்ளது.
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச வர்த்தகம் தொடர்பாக பல்வேறு பிரச்னைகளை ஏற்றுமதி, இறக்குமதி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.குறிப்பாக சுங்க அனுமதி, வங்கி விஷயங்கள், ஏற்றுமதி உரிமம், ஏற்றுமதி _ இறக்குமதி சம்பந்தமான ஆவணங்கள் போன்றவற்றில் தாமதங்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியதாகி விடுகிறது.
இத்தகைய பிரச்னைகளை சரிசெய்வதற்கு உதவியாக, மத்திய வர்த்தக அமைச்சகம், கொரோனா உதவி மையத்தை துவக்கி உள்ளது.இத்தகைய உதவி மையம் முதன் முதலில், கடந்த ஆண்டு ஏப்ரலில் துவங்கப்பட்டது. வர்த்தக அமைச்சகத்தை சேர்ந்த வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் இவ்விஷயங்களை கவனித்து வருகிறது.
வெளிநாட்டு வர்த்தகத்தில், கொரோனா சம்பந்தமாக பிரச்னைகள் ஏற்பட்டால், அவற்றை சரிசெய்யும் பணியை இந்த உதவி மையம் மேற்கொண்டு வந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தில் இருப்போர், அவர்கள் பிரச்னைகளை, இயக்குனரகத்தின் இணைய தளத்தில் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அவை சரிசெய்யப்படும் என அமைச்சரகம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|