பதிவு செய்த நாள்
07 ஜன2022
23:23
புதுடில்லி:‘டாடா சன்ஸ்’ நிறுவனத்தின் கவுர தலைவரான ரத்தன் டாடாவின் சுயசரிதை, விரைவில் அச்சு வடிவில் வெளியாக உள்ளது.
ரத்தன் டாடாவின் சுயசரிதையை புத்தகமாக வெளியிடுவதற்காக, அண்மையில் உலகளவில் ஏலம் நடைபெற்றது. இதில், பிரிட்டனை சேர்ந்த ‘ஹார்பர்காலின்ஸ்’ நிறுவனம், ஏலத்தில் வென்று, புத்தகத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது.
இந்த சுயசரிதைக்கான ஒப்பந்தம், இந்தியாவின் மிகப்பெரிய ஒப்பந்தமாக இருக்கும் என கூறப்படுகிறது.ரத்தன் டாடாவின் இந்த வாழ்க்கை சரிதத்தில், அவரது குழந்தை பருவத்தில் துவங்கி, கல்லுாரி வாழ்க்கை, தொழிலதிபராக பொறுப்பேற்று சாதனை சிகரங்களை தொட்டது வரையிலான, 84 ஆண்டு கால வாழ்க்கை, விரிவாக விளக்கப்பட உள்ளது.
இந்த உரிமையை பெற்றது குறித்து, விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சுயசரிதையை யார் எழுத உள்ளார் என்பது இனிதான் தெரிய வரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|