பதிவு செய்த நாள்
07 ஜன2022
23:26
புதுடில்லி:ஒமைக்ரான் தொற்றால் ஏற்படக்கூடிய இடையூறுகளை சமாளிக்கும் நிலையில் பொதுத் துறை வங்கிகள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்வதற்காக, அவ்வங்கிகளின் தலைவர்களை, காணொலி வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
இது குறித்த மத்திய நிதியமைச்சகத்தின் டுவிட்டர் செய்தியில், இந்த சந்திப்பில் பொதுத்துறையை சேர்ந்த வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை தொற்றுநோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதில், பொதுத் துறை வங்கிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து நிதியமைச்சர் கேட்டு அறிந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்திருக்கும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை, பல தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்து அறிவித்து வருகின்றன.‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம், அதன் மதிப்பீட்டை 9.4 சதவீதம் என்பதிலிருந்து, 9.3 சதவீதமாக குறைத்துள்ளது.
‘பிரிக்வொர்க் ரேட்டிங்’ நிறுவனம், முந்தைய கணிப்பான 10 சதவீதத்தை, 8.5_9 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், அண்மைக்காலமாக ஒமைக்ரான் பாதிப்புகளை சமாளிக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுத் துறை வங்கி அதிகாரிகளை, நிதியமைச்சர் நேற்று சந்தித்து பேசி உள்ளார்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|