ரத்தன் டாடாவின் சுயசரிதை ஏலத்தில் வென்ற நிறுவனம் ரத்தன் டாடாவின் சுயசரிதை ஏலத்தில் வென்ற நிறுவனம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்கி உயர் அதிகாரிகளுடன் மத்திய நிதியமைச்சர் சந்திப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜன
2022
23:26

புதுடில்லி:ஒமைக்ரான் தொற்றால் ஏற்படக்கூடிய இடையூறுகளை சமாளிக்கும் நிலையில் பொதுத் துறை வங்கிகள் உள்ளனவா என்பதை அறிந்துகொள்வதற்காக, அவ்வங்கிகளின் தலைவர்களை, காணொலி வாயிலாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
இது குறித்த மத்திய நிதியமைச்சகத்தின் டுவிட்டர் செய்தியில், இந்த சந்திப்பில் பொதுத்துறையை சேர்ந்த வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவை தொற்றுநோய் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முடிவுகளை செயல்படுத்துவதில், பொதுத் துறை வங்கிகள் எவ்வாறு உள்ளன என்பது குறித்து நிதியமைச்சர் கேட்டு அறிந்ததாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் ஒமைக்ரான் தொற்று வேகமெடுத்திருக்கும் நிலையில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை, பல தர நிர்ணய நிறுவனங்கள் குறைத்து அறிவித்து வருகின்றன.‘இந்தியா ரேட்டிங்ஸ் அண்டு ரிசர்ச்’ நிறுவனம், அதன் மதிப்பீட்டை 9.4 சதவீதம் என்பதிலிருந்து, 9.3 சதவீதமாக குறைத்துள்ளது.
‘பிரிக்வொர்க் ரேட்டிங்’ நிறுவனம், முந்தைய கணிப்பான 10 சதவீதத்தை, 8.5_9 சதவீதமாக குறைத்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம், அண்மைக்காலமாக ஒமைக்ரான் பாதிப்புகளை சமாளிக்க, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுத் துறை வங்கி அதிகாரிகளை, நிதியமைச்சர் நேற்று சந்தித்து பேசி உள்ளார்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)