பதிவு செய்த நாள்
07 ஜன2022
23:33
பொருளாதார வளர்ச்சி கணிப்பு
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த
நிதியாண்டில் 9.2 சதவீதமாக இருக்கும் என்று முன்கூட்டி கணித்து
அறிவித்துள்ளது, தேசிய புள்ளியியல் அலுவலகம்.வேளாண், சுரங்கம், தயாரிப்பு
ஆகிய துறைகளில் மேம்பட்ட செயல்பாடுகள் காரணமாக, இந்த வளர்ச்சி எட்டப்படும்
என்றும்; இது கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகம் என்றும்
தெரிவித்துள்ளது.
19 நாடுகளின் பணவீக்கம் உயர்வு
‘யூரோ’ நாணயத்தை பயன்படுத்தும் 19 நாடுகளின் பணவீக்கம், 5 சதவீதத்தை எட்டியுள்ளது. 1997ம் ஆண்டிலிருந்து பணவீக்கம் பதிவு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது முதன் முறையாக, பணவீக்கம் இவ்வளவு அதிகரித்துள்ளது.எரிபொருள் விலை அதிகரித்ததன் காரணமாக, இந்த நாடுகளின் பணவீக்கமும் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனியார் பங்கு முதலீடு
கடந்த ஆண்டில், இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில், கிட்டத்தட்ட 2.98 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தனியார் பங்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இது, அதற்கு முந்தைய ஆண்டான 2020ஐ விட 15 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டில், ‘பிளிப்கார்ட்’ நிறுவனத்தில் அதிகளவில் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தர நிர்ணய கழகம்
இந்திய தர நிர்ணய கழகமான பி.ஐ.எஸ்., துவங்கப்பட்டு, 75 ஆண்டுகள் ஆகின்றன. இதற்கு முன், ஐ.எஸ்.ஐ., என அழைக்கப்பட்ட பி.ஐ.எஸ்., கடந்த 1947ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இந்தியா சுதந்தரமடைந்ததும், இந்நிறுவனம் துவங்கப்பட்டதும் ஒரே ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
வாடகையிலிருந்து முழு விலக்கு
கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து, இந்திய தேசிய உணவகங்களின் சங்கம், உணவகங்கள் முழுதுமாக மூடப்பட்டால், வாடகையிலிருந்து முழு விலக்கு அளிக்க வேண்டி, ‘மால்’களின் உரிமையாளர்களுக்கு கடிதம் எழுதி உள்ளது.இந்திய உணவகங்கள், ஆண்டுக்கு 4.25 லட்சம் கோடி ரூபாய் விற்றுமுதலும்; 70 லட்சம் நேரடி வேலைவாய்ப்பையும் கொண்டிருக்கும் துறையாகும்.
பெப்சிகோவின் பொங்கல் சிறப்பு
‘பெப்சிகோ’ நிறுவனம், பொங்கலை முன்னிட்டு, அதன் ‘7 அப்’ குளிர்பானத்தின் சிறப்பு பதிப்பை, தமிழகத்தில் வெளியிட்டுள்ளது.பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதில் தாங்களும் பங்கு வகிக்க விரும்பி, இந்த சிறப்பு பதிப்பை வெளியிடுவதாக பெப்சிகோ தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|