வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு பெங்களூரு நிறுவனத்தில் சத்ய நாதெள்ளா முதலீடு ...
நாளை தங்க பத்திர வெளியீடு:; ஒரு கிராம் விலைரூ. 4,786
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
01:18

மும்பை:மத்திய அரசின் ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்க இருப்பதாகவும்; 1 கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின், ஒன்பதாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாளை துவங்கவிருக்கும் இந்த பத்திர வெளியீடு, ஐந்து நாட்கள் அதாவது, 14ம் தேதி வரை நடைபெறும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதையடுத்து, ௧ கிராம் தங்கத்தின் விலை 4,786 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, தங்கம் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், இந்த தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.நிதியமைச்சகத்தின் சார்பாக, ரிசர்வ் வங்கி இந்த தங்க பத்திர வெளியீட்டை மேற்கொள்ளும்.
வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும். பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படும். ‘கிரெடிட், டெபிட்’ கார்டு, வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும்.
இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,736 ரூபாய்க்கு கிடைக்கும்.கடந்த நவம்பர் 29ம் தேதி முதல், டிசம்பர் 3ம் தேதி வரை நடைபெற்ற இதற்கு முந்தைய எட்டாவது தங்க பத்திர வெளியீட்டில், ௧ கிராம் 4,791 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தனி நபர்கள் அதிகபட்சமாக, 4 கிலோ தங்கம் வரை இந்த பத்திரங்களில் முதலீடு செய்யலாம். அறக்கட்டளைகள் போன்றவை, 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். பத்திரத்தின் முதிர்வு காலம் 8 ஆண்டுகள் ஆகும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)