பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:11
புதுடில்லி : வாகன தயாரிப்பு மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கான, பி.எல்.ஐ., எனும் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற, 115 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.
வாகன துறைக்கான பி.எல்.ஐ., திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் 23ல் அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு கடைசி தேதி, இம்மாதம் 9ம் தேதி என்றும் அறிவிக்கப்படிருந்தது.காலக்கெடு முடிவடைந்த நிலையில், இதுவரை 115 நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பதாக, கனரக அமைச்சரகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், ஏப்ரல் 2022 முதல், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு, இந்தியாவில் தயாரிக்கப்படும் மேம்பட்ட தொழில்நுட்பத்திலான வாகனங்கள் மற்றும் பாகங்களுக்கு ஊக்கத்தொகை சலுகைகள் கிடைக்கும்.உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், இந்த திட்டத்துக்கு 25 ஆயிரத்து, 938 கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், பல்வேறு துறைகளுக்கு, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டங்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|