பதிவு செய்த நாள்
11 ஜன2022
11:13
புதுடில்லி : மீண்டும் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், விருந்தோம்பல் துறையை காப்பாற்றும் வகையில், அத்துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய ஹோட்டல்கள் சங்கமான எச்.ஏ.ஐ., கோரிக்கை வைத்துள்ளது.
இது குறித்து இந்த சங்கம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
விருந்தோம்பல் துறையானது, உள்நாட்டு சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றால் மெதுவாக மீட்சியை கண்டு வந்தது. ஆனால், தற்போது ஒமைக்ரான் பரவல், மீண்டும் இத்துறையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.இது போன்ற நீண்டகால பின்னடைவுகளின் போது, தொழில்துறைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்நிலையில், இத்துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அது இத்துறை பிழைத்துக் கொள்ள உதவும்.நிதிகளை திரட்டிக்கொள்ளும் வாய்ப்பு, கடன்களை திரும்ப செலுத்த நீண்ட கால அவகாசம் ஆகியவை மீட்சிக்கு உதவுவதாக இருக்கும்.உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கும்பட்சத்தில், குறைந்த வரிகளால் ஹோட்டல்கள் நன்மையடையும். மேலும் திட்டங்களுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளும் எளிதாகும்.
விருந்தோம்பல் துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 4.5 கோடி பேர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 16 கோடி பேர் வாழுவதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இவ்வாறு இந்திய ஹோட்டல் சங்கம் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|