நுகர்பொருள் சாதன விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்கும்? நுகர்பொருள் சாதன விலை 5 – 10 சதவீதம் அதிகரிக்கும்? ...  ஐ.சி.ஐ.சி.ஐ., கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்கிறது ஐ.சி.ஐ.சி.ஐ., கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்கிறது ...
‘உள்கட்டமைப்பு’ அந்தஸ்து தேவை விருந்தோம்பல் துறையினர் கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2022
11:13


புதுடில்லி : மீண்டும் தொற்றுநோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில், விருந்தோம்பல் துறையை காப்பாற்றும் வகையில், அத்துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என, மத்திய அரசுக்கு, இந்திய ஹோட்டல்கள் சங்கமான எச்.ஏ.ஐ., கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து இந்த சங்கம் மேலும் தெரிவித்து உள்ளதாவது:
விருந்தோம்பல் துறையானது, உள்நாட்டு சுற்றுலா மற்றும் நிகழ்ச்சிகள் போன்றவற்றால் மெதுவாக மீட்சியை கண்டு வந்தது. ஆனால், தற்போது ஒமைக்ரான் பரவல், மீண்டும் இத்துறையை நிச்சயமற்ற நிலைக்கு தள்ளி உள்ளது.இது போன்ற நீண்டகால பின்னடைவுகளின் போது, தொழில்துறைகளை பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
இந்நிலையில், இத்துறைக்கு உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கப்பட்டால், அது இத்துறை பிழைத்துக் கொள்ள உதவும்.நிதிகளை திரட்டிக்கொள்ளும் வாய்ப்பு, கடன்களை திரும்ப செலுத்த நீண்ட கால அவகாசம் ஆகியவை மீட்சிக்கு உதவுவதாக இருக்கும்.உள்கட்டமைப்பு அந்தஸ்து வழங்கும்பட்சத்தில், குறைந்த வரிகளால் ஹோட்டல்கள் நன்மையடையும். மேலும் திட்டங்களுக்கான அனுமதி பெறும் நடைமுறைகளும் எளிதாகும்.
விருந்தோம்பல் துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி 4.5 கோடி பேர்களுக்கான வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தை சேர்ந்த 16 கோடி பேர் வாழுவதற்கான வாய்ப்பையும் வழங்கி வருகிறது.
இவ்வாறு இந்திய ஹோட்டல் சங்கம் தெரிவித்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)