பதிவு செய்த நாள்
11 ஜன2022
22:14
புதுடில்லி:வணிகங்கள் தொழில்நுட்பத்தை அதிகரிப்பதன் வாயிலாக, தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும். மேலும், விலை மலிவாகவும் வழங்க முடியும் என, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா கூறிஉள்ளார்.
‘மைக்ரோசாப்ட் பியூச்சர் ரெடி’ எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் மேலும் கூறியதாவது:பல்வேறு அளவிலான வணிகங்கள், தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்க வேண்டும்.இதன் வாயிலாக, தங்களுடைய தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் உற்பத்தி திறனை அதிகரித்து கொள்ள முடியும். மேலும் விலையையும் மலிவாக்கிக்கொள்ள இயலும்.
கொரோனாவை முன்னிட்டு, உலகெங்கும் நிறுவனங்கள் டிஜிட்டலுக்கு மாறி வருகின்றன. இந்த மாற்றம், ‘மைக்ரோசாப்ட்’ போன்ற நிறுவனங்களுக்கு சிறந்த வாய்ப்பை வழங்கி உள்ளது.மாற்றங்களுக்கு வழிகாட்டுவதன் வாயிலாக, தங்களை வலுப்படுத்திக்கொள்ள கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு இது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|