பதிவு செய்த நாள்
12 ஜன2022
21:04
புதுடில்லி:குடியிருப்பு மனைகளின் விலை, ஆண்டுதோறும், சராசரியாக 7 சதவீதம் அதிகரித்து வருவதாக, ரியல் எஸ்டேட் இணையதளமான ‘ஹவுஸிங் டாட் காம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டில் உள்ள முக்கியமான எட்டு நகரங்களில், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து, குடியிருப்பு மனைகளின் விலை, ஆண்டுதோறும் சராசரியாக 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேசமயம், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 2 சதவீத அளவுக்கே அதிகரித்துள்ளது.
முதலீடு என்பதை பொறுத்தவரை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செய்வதை விட, குடியிருப்பு மனைகளில் செய்யப்படுவது, அதிக லாபம் தருவதாக, தொடர்ந்து இருந்து வருகிறது. வீட்டு மனைகள், கடந்த 2015ம் ஆண்டிலிருந்து அதிக மூலதன வருவாயை ஈட்டி தருவதாக உள்ளது.
மேலும், கொரோனா பாதிப்புகளுக்கு பின், அடுக்குமாடி குடியிருப்புகளை விட, தனிப்பட்ட வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், பெரிய நகரங்களில் இத்தகைய இடங்கள் அதிகம் இல்லை.அதேசமயம் பாதுகாப்பு, பொது வசதிகள் ஆகியவற்றுக்கான வாய்ப்பு, அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்பதால், பெரும்பாலானோர் அதை விரும்புகின்றனர்.
சென்னை உள்ளிட்ட தென்பகுதியில் உள்ள மாநிலங்களில், 2018ம் ஆண்டுக்கு பின், குடியிருப்பு மனைகளின் விலை, இரட்டை இலக்க வளர்ச்சி கண்டுள்ளது.ஆனால், அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை 2 முதல் 6 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி பெற்றுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|