வாகன தயாரிப்பு நிறுவனங்களின்  ஆர்வம் வாகன தயாரிப்பு நிறுவனங்களின் ஆர்வம் ...  மின்சார வாகன பயன்பாடு ஸ்விக்கி ஒப்பந்தம் மின்சார வாகன பயன்பாடு ஸ்விக்கி ஒப்பந்தம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது இந்தியா மீது எலான் மஸ்க் குற்றச்சாட்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2022
20:55

புதுடில்லி:இந்தியாவில் தன் நிறுவன தயாரிப்புகளை அறிமுகம் செய்ய, அரசுடன் நிறைய சவால்களை சந்திக்க வேண்டியிருப்பதாக, அமெரிக்காவைச் சேர்ந்த மின்சார கார் தயாரிப்பு நிறுவனமான ‘டெஸ்லா’வின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் தெரிவித்து உள்ளார்.
டெஸ்லா நிறுவனம் அதன் தயாரிப்புகளை, இந்தியாவில் அறிமுகம் செய்ய என்ன திட்டங்களை வைத்திருக்கிறது என்ற டுவிட்டர் வாயிலான கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், அரசுடனான ஏராளமான சவால்களுடன் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில், மின்சார காருக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு கோரிக்கை வைத்தார் எலான் மஸ்க்.
இதற்கு மத்திய கனரக துறை அமைச்சகம், ‘டெஸ்லா முதலில் இந்தியாவில் கார் தயாரிப்பை துவங்கட்டும். அதன் பின் வரி சலுகைகள் குறித்து பார்க்கலாம்’ என்று தெரிவித்தது.மேலும், எந்த வொரு வாகன நிறுவனத்திற்கும் இதுபோன்ற சலுகை களை வழங்கவில்லை என்றும், டெஸ்லாவுக்கு வரி சலுகைகளை வழங்குவது, இந்தியாவில் பல கோடி டாலர்களை முதலீடு செய்திருக்கும் மற்ற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும் என்றும், அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்போது, முழுமையாக தயாரிக்கப்பட்டு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு, 60 முதல் 100 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது.இந்நிலையில், டெஸ்லா நிறுவனம், அனைத்து வகையான மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை, ஒரே அளவாக 40 சதவீதமாக மாற்றும்படி கோரிக்கை வைத்தது. மேலும், இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில், இந்திய மின்சார வாகன சூழல் மேம்படும் என்றும்; நிறுவனம் விற்பனை, சேவை, சார்ஜிங் கட்டமைப்பு போன்ற வற்றில் குறிப்பிடத்தக்க அளவில், அன்னிய நேரடி முதலீட்டை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தது.
டெஸ்லா கடந்த ஆண்டு ஜனவரியில், ‘டெஸ்லா இந்தியா மோட்டார் அண்டு எனர்ஜி’ எனும் நிறுவனத்தை பெங்களூரில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில், எலான் மஸ்க் அரசை குற்றஞ்சாட்டும் விதமாக இப்படி ஒரு பதிலளித்துள்ளார்.
அழுத்தம் கொடுக்க பார்க்கிறார்
எலான் மஸ்க், அரசு மீது இப்படி ஒரு குற்றச்சாட்டை எழுப்பி உள்ள நிலையில், அவர் சமூக ஊடகங்கள் வாயிலாக, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறார் என்றும், அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அவரது இந்த தந்திரத்துக்கு இந்தியா அடிபணியாது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கான, உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட சலுகை திட்டம் உள்ளது.இதன் கீழ், டெஸ்லா, உள்நாட்டில் உற்பத்தி செய்தால், அதற்கு நல்ல பலன் கிடைக்கும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)