பதிவு செய்த நாள்
13 ஜன2022
21:29
புதுடில்லி:‘டி.வி.எஸ்., மோட்டார்’ நிறுவனம், அதன் மின்சார வர்த்தக வாகன பிரிவை வலுப்படுத்தும் வகையில், உணவு வினியோக நிறுவனமான, ‘ஸ்விக்கி’ உடன் கைகோத்துள்ளது.
இது குறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம் தெரிவித்துள்ள தாவது:மின்சார வர்த்தக வாகன பிரிவை வலுப்படுத்துவதற்காக, உணவு வினியோக நிறுவனமான ஸ்விக்கி உடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஸ்விக்கி நிறுவனம், உணவு வினியோகம் மற்றும் பிற தேவைகேற்ற சேவைகளுக்காக, டி.வி.எஸ்., மோட்டாரின் மின்சார வாகனத்தை பயன்படுத்தி சோதனையில் ஈடுபடும்.இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் குறித்து ஸ்விக்கி தரப்பில், “2025ம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்கள் வாயிலாக, நாளொன்றுக்கு 8 லட்சம் கிலோ மீட்டர் என்ற அளவு வரை டெலிவரி செய்ய வேண்டும் என்ற உறுதியுடன் நிறுவனம் உள்ளது.
“மேலும், பசுமை இயக்கத்தில் ஒரு நிலையான தீர்வை எட்டவும், எங்கள் டெலிவரி பார்ட்னர்களுக்கு அதிக வருமானம் ஈட்டவும், இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|