வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடிதிரட்டி சாதனை ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடிதிரட்டி சாதனை ...
பொருளாதார வளர்ச்சி குறித்து இந்திய வணிகங்கள் நம்பிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2022
21:43

புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக நம்பிக்கையுடன் இருப்பது, ஆய்வு ஒன்றின் வாயிலாக தெரியவந்துள்ளது.
‘டெலாய்ட்’ நிறுவனத்தின் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆய்வின் வாயிலாக, இது தெரியவந்து உள்ளது. இந்நிறுவனம், இந்தியாவில் 10 துறைகளை சேர்ந்த, 163 தொழில்துறை தலைவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது. இதில் 75 சதவீதம் பேர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிட்டத்தட்ட 91 சதவீதம் பேர், அரசின் ‘ஆத்மநிர்பர் பாரத்’ முயற்சிகள் மற்றும், ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை முடிவுகள் ஆகியவை, இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

மேலும், உள்கட்டமைப்பு முதலீடுகளில், நீண்ட கால முதலீடுகளுக்கு வழங்கப்படும் கூடுதல் வரி சலுகைகள் வளர்ச்சிக்கு உதவும் என, 55 சதவீத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.இந்த பட்ஜெட்டில், மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளுக்கான செலவினங்களுக்கு அதிக சலுகைகள் வழங்குவது குறித்து கவனிக்க வேண்டும் என்று 45 சதவீதம் பேர் எதிர்பார்க்கின்றனர்.
ஏற்றுமதி
போட்டித் தன்மையை அதிகரிப்பது, போட்டியை சமாளிக்கும் விதத்திலான இறக்குமதி கட்டணங்கள், நிர்வாக திறமையின்மையை குறைப்பது ஆகிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மேலும் பலர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.இவ்வாறு டெலாய்ட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)