இந்திய பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு இந்திய பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் கணிப்பு ...  இணைய மோசடிகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை இணைய மோசடிகள் அதிகரிப்பு: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கடன் வசதியை சரியான முறையில் நிர்வகிப்பது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2022
19:08

‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தின் தாக்கத்தால் கடன் வசதியிலும் அண்மை காலத்தில் பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதும் எளிதாகி இருக்கிறது. கடன் வாங்குவதில் இருந்த தயக்கமும் குறைந்திருக்கிறது.

இந்த சூழலில் கடனை சரியாக கையாளத் தெரிந்திருப்பது அவசியம். இதற்கு கடன் சுழற்சி கருத்தாக்கத்தை புரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். கடனுக்காக விண்ணப்பிப்பது துவங்கி, முழு தொகையையும் வட்டியுடன் செலுத்தி வெளியேறுவது வரையிலான செயல்பாடுகள் கடன் சுழற்சி என கருதப்படுகிறது. இது தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கடன் கணக்கு:

கடன் சுழற்சி, கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முன் மேற்கொள்ள வேண்டிய நிதி கணக்குகளில் இருந்து துவங்குகிறது. கடன் பெறுபவர், தனக்கு தேவையான கடன் வசதியையும், கடன் அளவையும் தீர்மானிக்க வேண்டும். அதன் பின், வரவு – செலவுகளுக்கு ஏற்ப மாதத் தவணையாக எவ்வளவு செலுத்த முடியும் என்பதை முடிவு செய்ய வேண்டும்.

ஆய்வு தேவை:

கடன் வசதி தொடர்பான தகவல்களை ஆய்வு செய்வது அடுத்த கட்டமாக அமைகிறது. வட்டி விகிதம் உள்ளிட்ட கடனுக்கான அம்சங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ‘ஆன்லைன்’ சாதனங்களையும் நாடலாம். நிதி சூழலுக்கும், தேவைக்கும் பொருத்தமான கடன் வசதியை தேர்வு செய்ய இந்த ஆய்வு உதவும்.

விண்ணப்ப காலம்:

கடனுக்காக விண்ணப்பத்திலும் கவனம் செலுத்த வேண்டும். விண்ணப்பத்தில் தகவல்கள் சரியாக இடம் பெற்றிருப்பது, கடன் அனுமதியை எளிதாக்கும். அதே போல, கடன் தகுதிக்கு தேவையான ஆவணங்களையும் இணைத்திருக்க வேண்டும். ‘கிரெடிட்’ ஸ்கோரையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

கடன் வழங்கல்:

கடனுக்கான விண்ணப்ப செயல்முறை பூர்த்தியானவுடன் வங்கி அல்லது நிதி நிறுவனம் கடனுக்கான தொகையை பட்டுவாடா செய்யும். விதிகள், நிபந்தனைகளுக்கு ஏற்ப கடன் தொகை வங்கி கணக்கிற்கு மாற்றப்படும். கடன் பெற்ற பின், மாதத் தவணையை தவறாமல் செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.

கடன் பைசல்:

தவணையை முறையாக செலுத்தி வந்தால், உரிய காலத்தில் கடனை அடைத்து விட்டு வெளியேறலாம். கடன் முடிவடைந்ததற்கான கடிதத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். கடனுக்கான காலம் குறைவாக இருப்பதும், தேவைக்காக மட்டுமே கடன் வாங்குவதும் கடன் நிர்வாகத்தில் கைகொடுக்கும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)