ஆயிரம் சந்தேகங்கள் மத்திய தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் சஆயிரம் சந்தேகங்கள் மத்திய தர வர்க்கத்தினருக்கு பட்ஜெட்டில் ச ...  ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ஒருங்கிணைந்த ஆடை பூங்கா விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு ...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் நடப்பாண்டில் ஜொலிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
10:12


மும்பை : நடப்பாண்டில், 50 ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், ‘யுனிகார்ன்’ அந்தஸ்து பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும், மேலும், குறைந்தபட்சம் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களாவது, 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்டதாக இருக்கும் என்றும் ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனிகார்ன் அந்தஸ்துஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 7,400 கோடி ரூபாயை தாண்டும்பட்சத்தில், அந்நிறுவனம் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றதாக கருதப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து, ஆலோசனை நிறுவனமான பி.டபுள்யு.சி., இந்தியா, மேற்கொண்ட ஆய்வில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் நடப்பாண்டில், கிட்டத்தட்ட 50 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்தை பெறுவதற்கான வாய்ப்பை கொண்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டு இறுதியில் 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, குறைந்தபட்சம் 100 தாண்டும்.
கடந்த ஆண்டில், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத ஏராளமான நிறுவனங்களின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகரித்தது. 43 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இக்காலகட்டத்தில் உருவாகி உள்ளன.
மூன்று பகுதி முதலீடு
யுனிகார்ன் மதிப்பை எட்டிய நிறுவனங்களின் எண்ணிக்கை, ஆண்டு கடைசியில் 68 ஆக அதிகரித்தது.கடந்த அக்., – டிச., காலாண்டில் மட்டும், இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில், 74 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பெங்களூரு மற்றும் டில்லி தலைநகர் பிராந்தியத்தைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், மொத்த முதலீட்டில் நான்கில் மூன்று பகுதி முதலீடுகளை ஈர்த்துள்ளன.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)