வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தங்க இறக்குமதி வரியை குறைக்க அரசிடம் கோரிக்கை தங்க இறக்குமதி வரியை குறைக்க அரசிடம் கோரிக்கை ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘டெஸ்லா’ ஆலை அமைக்க கர்நாடக அரசு அழைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
21:00

பெங்களூரு:‘டெஸ்லா’ மின்சார கார் தொழிற்சாலையை கர்நாடகாவில் அமைக்க வருமாறு, எலான் மஸ்குக்கு அம்மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே தெலுங்கானா, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள், தங்கள் மாநிலத்தில் ஆலையை அமைக்குமாறு எலானுக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், தற்போது, அந்த வரிசையில் கர்நாடக மாநிலமும் சேர்ந்து உள்ளது
.கர்நாடகாவின் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர், முருகேஷ் ஆர் நிராணி, டுவிட்டர் வாயிலாக இந்த அழைப்பை விடுத்துள்ளார்.அதில், 400க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், 45க்கும் மேற்பட்ட மின்சார வாகன ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என, மின்சார வாகனங்களுக்கான மையமாக பெங்களூரு உள்ளது.
எனவே, டெஸ்லா ஆலையை அமைக்க சிறந்த இடமாக கர்நாடகா உள்ளது. மேலும், இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதல் அடையாளமாகவும் பெங்களூரு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு ஜனவரியில், டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் கால்பதிப்பதற்காக அதன் இந்திய கிளையை பெங்களூருவில் பதிவு செய்தது.
மின்சார கார்களுக்கான இறக்குமதி வரியை குறைக்குமாறு அரசுக்கு ஏற்கனவே எலான் மஸ்க் கோரிக்கை வைத்திருந்தார்.ஆனால், இந்தியாவில் முதலீடு செய்திருக்கும் பிற நிறுவனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், டெஸ்லாவுக்காக வரியை குறைக்க முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக அண்மையில் எலான் மஸ்க், இந்தியாவில், அரசுடனான ஏராளமான சவால்களுடன் பணிபுரிந்து வருவதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு பல மாநிலங்களிலிருந்து அழைப்புகள் விடப்பட்டு வருகின்றன.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)