தங்க இறக்குமதி வரியை குறைக்க அரசிடம் கோரிக்கை தங்க இறக்குமதி வரியை குறைக்க அரசிடம் கோரிக்கை ...  எச்சரிக்கையாக இருக்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தல் எச்சரிக்கையாக இருக்குமாறு வணிகர்களுக்கு அறிவுறுத்தல் ...
‘ஆட்வெர்ப் டெக்’ நிறுவனத்தில் ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ முதலீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2022
21:05

புதுடில்லி:முகேஷ் அம்பானி தலைமையிலான, ‘ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், ‘ஆட்வெர்ப் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தி உள்ளது.
ஆட்வெர்ப் டெக், உள்நாட்டை சேர்ந்த, ‘ரோபோட்டிக்’ நிறுவனமாகும்.இது குறித்து, ஆட்வெர்ப் டெக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சங்கீத் குமார் கூறியதாவது: நிறுவனத்தின் 54 சதவீத பங்குகளை, 983 கோடி ரூபாயில், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளது. இதனையடுத்து, அதிக அளவிலான பங்கு களை கொண்ட பங்குதாரராக, ரிலையன்ஸ் மாறியுள்ளது.
இருந்த போதிலும், நிறுவனம், முன்பு போலவே தனியாகவே செயல்படும். ரிலையன்ஸ் முதலீடு செய்திருக்கும் தொகையை, வெளிநாட்டிலும் வணிகத்தை விரிவுபடுத்த பயன்படுத்தப்படும்.மேலும், மிகப் பெரிய தொழிற்சாலையை நொய்டாவில் அமைக்கவும் பயன்படுத்தப்படும்.நிறுவனத்துக்கு, ஏற்கனவே நொய்டாவில் ஆலை உள்ளது. அங்கு ஆண்டுக்கு 10 ஆயிரம் ரோபோட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்கனவே எங்கள் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளது. அதன் ‘ஜியோ மார்ட்’ நிறுவனத்தின் மளிகை பொருட்கள் வணிகத்துக்கு தேவையானவற்றை செய்து தந்துஉள்ளோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆட்வெர்ப் நிறுவனம், கடந்த 2016ல் துவங்கப்பட்டதாகும். கடந்த நிதியாண்டில் வருவாய் 200 கோடி ரூபாயாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் இருமடங்காக அதிகரித்து, 400 கோடி ரூபாயாக உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)