பதிவு செய்த நாள்
18 ஜன2022
21:08
புதுடில்லி:பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.
‘ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், வெராண்டா லேர்னிங் சொலுஷன்ஸ், டெலிவரி’ ஆகிய மூன்று நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக விண்ணப்பித்து இருந்த நிலையில், தற்போது, இவற்றுக்கு செபி அனுமதி வழங்கி உள்ளது.
இவற்றில், ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீசஸ் நிறுவனம், 60 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; நிறுவனர் வசம் இருக்கும் மூன்று கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது. இந்நிறுவனம், சென்னையை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
வெராண்டா லேர்னிங் சொலுஷன்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 200 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், ஆன்லைன் கல்வி நிறுவனமாகும்.
‘சப்ளை செயின்’ நிறுவனமான டெலிவரி, 7,460 கோடி ரூபாயை, புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்ட திட்டமிட்டுள்ளது. இதில் 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும்; 2,460 கோடி ரூபாய்க்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|