பதிவு செய்த நாள்
19 ஜன2022
23:18
சென்னை:சுங்கத் துறையிடமிருந்து வரும் குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்களில் ஆவண அடையாள எண்கள் இடம்பெறும்; மோசடி நபர்களிடம் ஏமாற வேண்டாம் என, வணிகர்களுக்கு சுங்கத் துறை அறிவுறுத்தி உள்ளது.
சுங்க வரி அல்லது சுங்கக் கட்டணம் செலுத்துமாறு, அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால், விழிப்புணர்வுடன் வணிகர்கள் செயல்பட வேண்டும்.சுங்கத் துறையிட மிருந்து வரும் அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் மின்னஞ்சல்களில் ‘டி.ஐ.என்.,’ என்ற, ஆவண அடையாள எண் இடம் பெற்றிருக்கும்.
மேலும், தனிநபர் வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட மாட்டார்கள்.மேலும், இது போன்ற அடையாள எண்களுடன், குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல்கள் வந்தால், esanchar.cbic.gov.in/DIN/DINSeach என்ற இணையதள முகவரியில், சரி பார்த்துக் கொள்ளலாம்.மோசடி நபர்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவலை நம்பி ஏமாற வேண்டாம்.
இது போன்ற அழைப்புகள் வந்தால், உடனடியாக உள்ளூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கவும் என, சுங்கத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|