பதிவு செய்த நாள்
19 ஜன2022
23:36
புதுடில்லி:முதலீட்டாளர்கள் விழிப்புணர்வு கல்விக்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ புதிதாக ஒரு மொபைல் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
மக்கள் மொபைல் போன்கள் வாயிலாக பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவது அதிகரித்து வரும் நிலையில், பங்குச் சந்தையின் அடிப்படை விஷயங்கள் குறித்து, முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த, ‘சாதி’ எனும் புதிய மொபைல் செயலியை செபி அறிமுகப் படுத்தியது.
இந்த செயலியை, செபியின் தலைவர் அஜய் தியாகி அறிமுகம் செய்து பேசியதாவது:இந்த மொபைல் செயலியானது, செபியின் மற்றொரு முன்முயற்சியாகும், இது முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை பற்றிய அறிவை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மைக் காலமாக, சில்லரை முதலீட்டாளர்கள் பெரும் அளவில் பங்குச் சந்தைக்கு வருகிறார்கள்.அதிலும் பெரும்பாலானவர்கள் வர்த்தகம் அல்லது முதலீட்டை, மொபைல் போன் வாயிலாகவே மேற்கொள்கிறார்கள்.மியூச்சுவல் பண்டு, பங்குச் சந்தை, பத்திரங்கள் போன்றவை குறித்த அடிப்படையான விஷயங்களை, இந்த செயலி வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
தற்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த செயலியை அணுகலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ்., போன்களில் இதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.விரைவில் இந்த செயலியை பிராந்திய மொழிகளிலும் அணுக முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|