பதிவு செய்த நாள்
19 ஜன2022
23:38
புதுடில்லி:பெரும்பாலான ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள், நடப்பு ஆண்டில் 30 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கட்டுமான பொருட்கள் விலை மிகவும் உயர்ந்துவிட்டதால், 30 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக, ஆய்வில் தெரிவித்துள்ளனர்.இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘கிரெடாய்’, அத்துறையினரின் நம்பிக்கை குறித்து, 1,322 மேம்பாட்டாளர்களிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.
ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:கட்டுமான பொருட்களின் விலை அண்மைக் காலத்தில் மிகவும் அதிகரித்து விட்டது. இதன் காரணமாக வீடுகள் உள்ளிட்ட வற்றின் விலையும் அதிகரிக்கும். அது கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு இருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
இதில் 60 சதவீதம் பேர், 20 சதவீதம் வரை விலை அதிகரிக்கலாம் என கருதுகின்றனர். 21 சதவீதம் பேர், 30 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கருதுகிறார்கள்.தற்போது ஆன்லைன் வாயிலான வர்த்தகம் அதிகரித்திருப்பதை அடுத்து, பெரும்பாலான டெவலப்பர்கள் ஆன்லைன் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகிறார்கள்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|