பதிவு செய்த நாள்
20 ஜன2022
21:13
புதுடில்லி:‘பார்தி’ குழுமத்தின் பின்னணியில் செயல்படும் ‘ஒன்வெப்’ நிறுவனமும், செயற்கைக்கோள் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘ஹியூஸ் நெட்வொர்க் சிஸ்டம்ஸ்’ நிறுவனமும், இந்தியாவில் செயற்கைக்கோள் பிராட்பேண்டு சேவைகளை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளன.
மாற்றம்
இந்த ஒப்பந்தம், ஆறு ஆண்டுகளுக்கானதாகும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது. செயற்கைக் கோள் பிராட்பேண்டு சேவை, பார்தி ஏர்டெல் மற்றும் ஹியூஸ் ஆகியவற்றின் கூட்டு நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.கடந்த ஆண்டு செப்டம்பரில் மேற்கொள்ளப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக, இந்த 6 ஆண்டு கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கூட்டு நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:டிஜிட்டல் இந்தியாவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இந்த சேவை இருக்கும்.
விமான சேவை
பெரு நிறுவனங்கள் துவங்கி, அரசு நிறுவனங்கள்,வங்கிகள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், விமான சேவைகள் என பல தரப்பிலும், மிக சிறப்பாக செயல்படும் செயற்கைக்கோள் வாயிலான பிராட்பேண்டு சேவையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதத்தில் எங்கள் சேவை இருக்கும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|