பதிவு செய்த நாள்
21 ஜன2022
20:11
காலக்கெடுவை நீட்டித்து அறிவிப்புபொதுத்துறை நிறுவனமான ‘எச்.எல்.எல்., லைப்கேர்’ நிறுவனத்தை வாங்க விரும்பும் நிறுவனங்கள், விருப்பத்தை தெரிவிப்பதற்கான காலக்கெடு, பிப்ரவரி 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் கருத்தடை சாதனங்கள், பெண்களுக்கான உடல்நல பராமரிப்பு பொருட்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
பிளிப்கார்ட், அமேசானுக்கு அழைப்பு
மின்னணு வர்த்தகம் குறித்த பிரச்னைகள் குறித்து விவாதிப்பதற்காக ‘அமேசான், பிளிப்கார்ட்’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு, அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. மின்னணு வர்த்தக கொள்கை உள்ளிட்டவை குறித்து பேசுவதற்கான இந்த சந்திப்பு, 27ம் தேதியன்று நடைபெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
‘எம்கியூர்’ பங்கு வெளியீடு ‘எம்கியூர்’ நிறுவனம், 5 ஆயிரம் கோடி ரூபாயை புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டுவதற்கு விண்ணப்பித்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யிடம் அனுமதியும் பெற்றுள்ளது. இந்நிலையில், இந்நிறுவனம் அடுத்த மாத துவக்கத்தில், பட்ஜெட் தாக்கல் முடிந்த பின், பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லாபத்தில் எஸ்.பி.ஐ., லைப்
எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த டிசம்பர் காலாண்டில், 56 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 364 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த நிதியாண்டின் இதே டிசம்பர் காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 233 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்
கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் 2,250 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. மேலும், இந்த ஆண்டில் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 1.78 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் அதிக அளவு முதலீட்டை, தொடர்ந்து அமெரிக்காவே மேற்கொண்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|