பதிவு செய்த நாள்
21 ஜன2022
20:23
கோல்கட்டா:அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் ஏற்றுமதி, 500 பில்லியன் டாலர் அதாவது, 37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டிருப்பதாக, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் அமியா சந்திரா கூறியுள்ளார்.
மேலும், கொரோனா பாதிப்புகள் உலக வர்த்தகம் குறித்த மறு சிந்தனையை உருவாக்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறியதாவது:கடந்த ஆண்டு டிசம்பரில், இந்திய சரித்திரத்தில் இதுவரை இல்லாத வகையில், நாட்டின் ஏற்றுமதி 2.80 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாண்டில், கடந்த 9 மாதங்களில் ஏற்றுமதி 22.30 லட்சம் கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.இதனையடுத்து, அடுத்த நிதியாண்டில் 37 லட்சம் கோடி ரூபாயாக இலக்கு வைக்கப்பட்டுஉள்ளது. மேலும், 2027ல் ஏற்றுமதி 74 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கவும் இந்தியா இலக்கு வைத்து உள்ளது.
கொரோனா பரவல், உலக வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், மறுசிந்தனைக்கு அது வழிவகுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|