பதிவு செய்த நாள்
21 ஜன2022
20:24
புதுடில்லி:சமையல் எண்ணெய் தயாரிப்பு நிறுவனமான ‘அதானி வில்மார்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் ஒரு பங்கின் விலை 218 – 230 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது
.3,600 கோடி ரூபாய்
அதானி குழுமம் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த வில்மார் ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும் இந்த அதானி வில்மார். அதானி வில்மார், சமையல் எண்ணெய் மற்றும் சில உணவு பொருட்களை ‘பார்ச்சூன்’ எனும் பிராண்டு பெயரில் தயாரித்து, விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், இந்நிறுவனம் 27ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளது. பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,600 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டு உள்ளது. துணிகர முதலீட்டாளர்கள் 25ம் தேதியன்று முதலீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் 4,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், அதை 3,600 கோடி ரூபாயாக குறைத்துக் கொள்வதாக அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பட்டியல்
முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை குறைந்தபட்சம் 65 அல்லது அதன் மடங்குகளின் எண்ணிக்கையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலவரப்படி, இதுவரை அதானி குழுமத்தின் 6 நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டு உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|