பதிவு செய்த நாள்
23 ஜன2022
01:02
புதுடில்லி:வரக்கூடிய பட்ஜெட் அறிவிப்பில், வருமான வரி விலக்கு வரம்பை, தற்போதைய 2.5 லட்சம் ரூபாய் என்பதிலிருந்து அதிகரிக்க வேண்டும் என பெரும்பாலான மக்கள் விரும்புவதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.
பிப்ரவரி முதல் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தணிக்கை, வரி உள்ளிட்டவற்றுக்கான ஆலோசனை நிறுவனமான ‘கே.பி.எம்.ஜி., இந்தியா’ ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் தெரியவந்துள்ளதாவது:ஆய்வில் பங்கேற்ற வர்களில் பெரும்பாலானோர், தற்போதைய வருமான வரி விலக்குக்கான வரம்பான 2.25 லட்சம் ரூபாயை மேலும் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பங்கேற்ற வர்களில் 36 சதவீதம் பேர், 80 சி பிரிவின் கீழ் வழங்கப்படும் விலக்குக்கான வரம்பு 1.5 லட்சம் ரூபாயிலிருந்து அதிகரிக்கப்படும் எனக் கருதுகின்றனர்.அத்துடன், 19 சதவீதம் பேர், சம்பளம் வாங்கும் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படும் நிலையான விலக்கு 50 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகரிக்கப்படலாம் எனக் கருதுகின்றனர்.
வீட்டிலிருந்து பணிபுரியும் நிலை ஏற்பட்டிருப்பதை அடுத்து, 16 சதவீதம் பேர் மாத சம்பளம் பெறுவோருக்கு இணைய இணைப்பு, பர்னிச்சர், இயர்போன்கள் போன்றவை வாங்குவதில் வரியில்லா சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|