பதிவு செய்த நாள்
23 ஜன2022
01:03
புதுடில்லி, ஜன. 23–கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி 5.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
இது குறித்து, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்துள்ளதாவது:நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், ஏற்றுமதி 5.7 சதவீதம் அதிகரித்து, 2.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.அமெரிக்கா, ஹாங்காங், தாய்லாந்து என முக்கியமான நகரங்களில் தேவை அதிகரித்ததை அடுத்து, இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 22 ஆயிரத்து, 496 கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், விடுமுறை மற்றும் பண்டிகைகள் காரணமாக தேவை அதிகரித்ததை அடுத்து, ஏற்றுமதியும் உயர்வை கண்டிருக்கிறது. இந்த போக்கு, வரும் மாதங்களிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளி ஏற்றுமதியும், ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் 94 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு கவுன்சில் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|