பதிவு செய்த நாள்
23 ஜன2022
22:31
மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்றும், வீட்டில் இருந்தே பணியாற்றுபவர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இந்த நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. பட்ஜெட் தொடர்பான ஆலோசனைகள், விவாதங்களுக்கு மத்தியில், பட்ஜெட்டில் இடம் பெறக்கூடிய முக்கிய அறிவிப்புகள் மற்றும் சலுகைகள் தொடர்பான பல்வேறு எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நிலவுகின்றன.
மத்திய பட்ஜெட்டில், வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு தற்போதுள்ள 2.50 லட்சம் ரூபாயில் இருந்து உயர்த்தப்படும் என, 64 சதவீதம் பேர் எதிர்பார்ப்பதாக, பட்ஜெட் எதிர்பார்ப்பு தொடர்பாக கே.பி.எம்.ஜி., ஆலோசனை நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.மேலும், வருமான வரிச் சட்டம், ‘80சி’ பிரிவின் கீழ் வழங்கப்படும் வரிச் சலுகை வரம்பும் உயர்த்தப்படலாம் என, 36 சதவீதம் பேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்தே பணியாற்றும் சூழ்நிலை தொடர்வதால், இது தொடர்பாகவும் ஊழியர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|