ஏசி, பெரிய டிவிகளுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ஏசி, பெரிய டிவிகளுக்கு ஜி.எஸ்.டி.,யை குறைக்க கோரிக்கை ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
ஏர் இந்தியா நிறுவனம் டாடாவிடம் 27ல் ஒப்படைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
09:46


புதுடில்லி : 'ஏர் இந்தியா' நிறுவனத்தை மத்திய அரசு, டாடா குழுமத்திடம் இம்மாதம் 27ம் தேதியன்று ஒப்படைக்க இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

இந்த வாரத்திலேயே ஏர் இந்தியா நிறுவனம், டாடா குழுமத்தின் கைகளுக்கு முழுமையாக சென்றுவிடும். வரும் 27ம் தேதியன்றுடன் டாடா குழுமத்திடம் ஒப்படைப்பதற்கான பணிகள் அனைத்தும் நிறைவுபெற்றுவிடும்.கடந்த 20ம் தேதிக்கான, 'குளோசிங் பேலன்ஸ் ஷீட்' டாடாவிடம் வழங்கப்பட்டுள்ளது.அது குறித்த டாடா குழுமத்தின் பரிசீலனையில் மாற்றங்கள் இருப்பின் அது சரி செய்யப்படும்.
இது குறித்த விஷயங்களை, ஏர் இந்தியாவின் நிதி இயக்குனர் வினோத் ஹெஜ்மாடி ஊழியர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், அடுத்த சில நாட்களுக்கு கடுமையான பணிகள் இருக்கும் என்றும், ஊழியர்களின் ஒத்துழைப்பு தேவை என்றும் மின்னஞ்சலில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

நிறுவனம் கைமாறிய பிறகு, ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், விஸ்டாரா என மூன்று சேவைகளை டாடா குழுமம் நடத்தும் என தெரியவந்து உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)